Saturday, 23 May 2009

முன்னோட்டம்

இன்னைக்கு எதையோ யோசிச்சிகிட்டு இருக்கும் போது , இப்படி எனக்கு தோன்ற யோசனையை எல்லாம் கோப்பாக வைத்தால் என்னன்னு தோனுச்சி. உடனே create பண்ணிட்டேன். இப்படி நிறைய ஆரம்பிச்சி இருக்கேன்... பாதியிலேயே நின்னு போனது நிறைய. முழுவதும் முடிந்ததும் அழித்தது சில.... இதுவாவது நிலைக்குதான்னு பார்ப்போம்.

எனக்கு எழுதத்தெரியும் ன்னு உங்ககிட்ட சொல்லி பெருசா எனக்கு எதுவும் கிடைக்கப்போறதில்லை. யாருன்னே தெரியாதவங்ககிட்ட எல்லாம் எனக்கு அங்கீகாரம் கிடைக்க எடுக்கும் முயற்சியும் இது இல்லை.

இப்படி ஒரு Blog இருக்குன்னு எத்தனை பேருக்கு தெரியப்போகுது..?? அதைப்பத்தி எனக்கென்ன கவலை. என்னை கவர்ந்த, யோசிக்க வைத்த, பாதித்த, பிடித்த அனைத்தும் இங்கே.....

சரி.. தலைப்புக்கு வருவோம். அது என்ன எல்லாமே நான்? நான் என்பது அகந்தையின் அடையாளம் அல்லவா? ஒவ்வொரு மனிதனும் முதலில் மறக்க வேண்டியது நான்.

எப்போதோ யாரோ சொன்னதாக நினைவு. "I want Peace" ன்னு ஒரு ஞானிகிட்ட ஒருத்தன் கேட்டானாம்... "What is I ? Ego, What is Want? Desire. root out the ego and desire, what remains is Peace" ன்னு ஞானி சொன்னாராம்.

இங்கே நான் நினைக்கும் "நான்" - அகந்தையில்லை. கர்வமில்லை. என்னைப்பொறுத்த வரையில்....

நான் என்பது உரிமை
நான் என்பது நிஜம்
நான் என்பது சத்தியம்
நான் என்பது உண்மை
நான் என்பது நிர்வாணம்


எனக்கு தெரிந்த நான் நல்லவனா, கெட்டவனா,சரியான பாதையில் செல்கிறவனா இல்லையா போன்றவற்றிற்கு முடிவு தெரியாமல் போனாலும், எனக்கு தெரிந்த நான் நிஜமானவன்.

இவன் நல்லவன்...எல்லார்கிட்டயும் நல்லா பேசுவான். அவனால முடிஞ்ச உதவி செய்வான் இப்படி ஒவ்வொருத்தரும் உங்களைப்பத்தி ஏதாவது நினைப்பாங்க. அதில் எந்த அளவிற்கு உண்மையிருக்கும் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.

ஆகவே இந்த நான் மிகவும் முக்கியமானவன். தேவையானவன். அத்தியாவசியமானவன். இந்த அடையாளம் வேண்டும்.

இன்று என் கையில் எது இருக்கிறதோ அது என்னுடையது.
நேற்று நான் இழந்ததும், நாளை நான் சேர்க்கப்போவதும் என்னுடையது
இறுதியில் இங்கே விட்டு செல்வதும் என்னுடையது.

மேற்சொன்னவையாவும் உங்களுக்கு சிறுபிள்ளைத்தனமாகவோ,பொய்யானதாகவும் இருக்கலாம். அது உங்களுக்குள் இருக்கும் நீங்கள் [:)]

No comments:

Post a Comment