Sunday, 24 May 2009

குழந்தை


இவரு பேரு சாய்டு. நீங்க என்ன பேசினாலும் இவருக்கு கவலையில்லை. இவர் பேச நினைக்கிறத பேசிகிட்டே இருப்பார். உங்களுக்கு புரியுதா இல்லையா அப்படிங்கிறதெல்லாம் இவருக்கு முக்கியம் இல்லை. அது இவரோட பிரச்சனையும் இல்லை. எந்த சூழ்நிலையில் நான் இவர்கிட்ட பேசினாலும் எனக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். மனசுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். இவர் பேசறது உங்களுக்கு புரியலைன்னா மறுபடியும் சொல்லுவாரு. அப்பவும் உங்களுக்கு புரியலைன்னா அடுத்த டாபிக்கு போய்டுவார்.

இவர் என்ன சாப்ட்றாரோ... அதையே தான் நீங்களும் சாப்பிடனும். இவர் bye சொல்றதுக்கு முன்னாடி நீங்க சொல்லக்கூடாது.

இவருக்கு முன்னாடி யாரும் சத்தமா பேசக்கூடாது. ஓடி வந்து சண்டைப் போடாதீங்க ன்னு சொல்லுவாரு.

பெரியப்பா -ன்னு சொல்ல இவருக்கு கஷ்டமா இருக்கறதால ரொம்ப யோசிக்காம uncle ன்னு சொல்லிடுவார்.

சாய் USA, ப்ரியா UK, சதா சிங்கப்பூர் ன்னு தெளிவா சொல்லுவார். ஷாப்பிங் போனா இவர் கையில ஒரு கூடை கொடுத்துடனும். இவருக்கு தேவையானதை எடுத்து இவரே போட்டுக்குவார். ஸ்டோலர் ல எல்லாம் உட்கார மாட்டார். ஏன்னா இவரு வளர்ந்துட்டாராம்.

தாத்தா தபோலி - அப்படின்னா தாத்தா கீழ விழுந்துட்டார்ன்னு அர்த்தம்
Guggu - அப்படின்னா not feeling well ன்னு அர்த்தம்

யார் போன் பண்ணாலும் உடனே USA வாங்கன்னு சொல்றது இவரோட வழக்கம். இவரோட குறும்பு பத்தி சொன்னா தனியா ஒரு blog தான் போடனும்.

பாட்டு நிறைய பாடுவார். "அக்கம் பக்கம் யாரும் இல்லா" கீரிடம் பாட்டு நல்லா பாடுவார். சரின்னு இவருக்கு போன் பண்ணும் போது, youtube ல அந்த பாட்டை கஷ்டப்பட்டு கண்டு புடிச்சி அந்த பாட்டை போட்டு விட்டா எந்த reaction ம் இல்லை. இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம் ன்னு இவங்க அம்மா கிட்ட கேட்டா, இவரோட fav மாறிப்போச்சாம். "முகுந்தா முகுந்தா" தான் விடாம கேக்குறாராம்.

சரின்னு அடுத்த தடவை அந்த பாட்டைப்போட்டா...தலைவர் ஒரே அழுகை... ஏன்னா இவர் தான் பாட்டு போடுவாராம். நாங்க போடக்கூடாதாம். வேற வழி... கேட்டுத்தானே ஆகணும்....

No comments:

Post a Comment