இந்த தலைப்பில் கவிதை எழுதாத கவிஞன் இருப்பது மிகவும் சிரமம். இந்த தலைப்பில் இருக்கும் கவிதைகளை ரசிக்காத ரசிகனும் கஷ்டம். எத்தனை கவிதைகள் படித்திருந்தாலும் எனக்கு இந்த தலைப்பில் பிடித்த கவிதை இது தான். வைரமுத்து எழுதியது.
செத்துக்கிடந்தேன் செல்வமே
என் சிதை விறகெடுத்து
உன் சித்திர விரல்கள்
விதவிதமாய் வீணைகள் செய்தன
உன்னிசை கேட்டு
உயிர்க்கொண்டெழுந்ததும்
பிரிவு ராகமா பேசுகிறாய் நீ!!!
சிறுக சிறுக என்னை சேர்த்து வைத்திருந்தேன் . உன் சில நொடி சின்னப் பார்வையால் சிதறிப்போனதே என் வாழ்க்கை. அஸ்தமனமாகி சிதையில் தீ தாங்க தயாராக இருந்த என்னை அப்படி விட்டுவிட்டிருக்க வேண்டியது தானே. எதற்காக உன் அன்பை காட்டி என்னை மீண்டும் எழுப்பி விட்டு, எழுந்து வந்ததும் துரத்தி அடிக்கிறாய்.
No comments:
Post a Comment